வா.மு.கோமு என்கிற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் விஜய மங்கலத்திற்கு அருகாமையிலிருக்கும் வாய்ப்பாடி என்கிற குக்கிராமத்தில் 1969ல் பிறந்தவர். 90களின் ஆரம்பத்தில் நடுகல் என்கிற சிற்றிதழை நடத்தியவர். தற்போது ராசமைந்தன் என்கிற புனைபெயரில் இறக்கை என்கிற இருமாத இதழை நடத்திவருகிறார். பல்வேறு சிற்றிதழ்களில் பல தரப்பட்ட சிறுகதைகளை 90களின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எழுதி வருகிறார். கடந்த ஆண்டு, அழுவாச்சி வருதுங்சாமி என்கிற சிறுகதை தொகுப்பும், உயிர்மை பதிப்பக வெளியீடாக மண்பூதம் என்கிற சிறுகதை தொகுப்பும் வெளிவந்து பரவலான கவனம் பெற்றது. கள்ளி இவருடைய முதல் நாவல்