லதா ராமகிருஷ்ணன் 9.11.1957இல் பிறந்தார். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். 1980களிலிருந்து அனாமிகா என்ற பெயரில் சிறுகதைகளும் ரிஷி என்ற பெயரில் கவிதைகளும் லா.ரா. என்ற பெயரில் இலக்கியம், சமூகம் குறித்த கட்டுரைகளும் எழுதி வருபவர். இதுவரை இரண்டு சிறுகதைத் தொகுப்புகள், நான்கு கவிதைத் தொகுப்புகள், ஒரு இலக்கியக் கட்டுரைகளின் தொகுப்பு மற்றும் பத்துக்கும் மேற்பட்ட மொழிபெயர்ப்பு நூல்கள் வெளியாகியுள்ளன. தமிழிலிருந்தும் ஆங்கிலத்திற்கு மொழிபெயர்ப்பு செய்து வருகிறார்.